காணும் பொங்கலை முன்னிட்டு திருத்தணி முருகன் வீதி உலா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Advertisement
இதில் தளபதி கே.விநாயகம் கல்வி அறக்கட்டளை தாளாளர் பாலாஜி குடும்பத்தினர் சுவாமியை வரவேற்று தீபாரதனை செய்து வழிபட்டனர். இதேபோல் திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, திமுக முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பூபதி, கோயில் இணை ஆணையர் ரமணி, நகர திமுக செயலாளர் வினோத் குமார், நகர்மன்ற உறுப்பினர் ஷியாம் சுந்தர் உட்பட முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் ஏராளமானோர் முருகப்பெருமானை தரிசித்தனர். தொடர்ந்து, மாலையில் பெரிய ரெட்டிகுளம் சண்முக தீர்த்தம் மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இரவில் சுவாமி மலைக்கோயில் சென்றடைந்தார்.
Advertisement