தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காணும் பொங்கலை முன்னிட்டு திருத்தணி முருகன் வீதி உலா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Advertisement

திருத்தணி: காணும் பொங்கலை முன்னிட்டு, முருகப்பெருமான் நகர முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கலை முன்னிட்டு, முருகப்பெருமான் திருத்தணியில் நகர வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். காணும் பொங்கலயொட்டி நேற்று அதிகாலை மலைக்கோயிலில் இருந்து திருப்படிகள் வழியாக சரவணப் பொய்கை மற்றும் சன்னதி தெருவில் வாகன சேவையில் எழுந்தருளி நகர வீதியுலா நடைபெற்றது. அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை, பைபாஸ் ரோடு, காந்தி நகர் உட்பட நகரின் பல்வேறு முக்கிய வீதிகளில் வள்ளி தெய்வானை, சமேத உற்சவர் முருகப்பெருமான் 1008 தங்க வில்வ இலை மாலை மற்றும் தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதில் தளபதி கே.விநாயகம் கல்வி அறக்கட்டளை தாளாளர் பாலாஜி குடும்பத்தினர் சுவாமியை வரவேற்று தீபாரதனை செய்து வழிபட்டனர். இதேபோல் திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, திமுக முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பூபதி, கோயில் இணை ஆணையர் ரமணி, நகர திமுக செயலாளர் வினோத் குமார், நகர்மன்ற உறுப்பினர் ஷியாம் சுந்தர் உட்பட முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் ஏராளமானோர் முருகப்பெருமானை தரிசித்தனர். தொடர்ந்து, மாலையில் பெரிய ரெட்டிகுளம் சண்முக தீர்த்தம் மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இரவில் சுவாமி மலைக்கோயில் சென்றடைந்தார்.

Advertisement

Related News