தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவலர்கள் சிறப்பு குறைதீர் முகாம்; போலீஸ் கமிஷனர் அருண் நேரில் மனுக்கள் பெற்றார்: உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

Advertisement

சென்னை: காவலர்கள் குறைதீர் முகாமில் போலீஸ் கமிஷனர் அருண் கலந்து கொண்டு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 90 போலீசாரிடம் புகார் மனுக்கள் பெற்றார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் காவலர்களுக்கான குறைதீர் முகாம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த காவலர்கள் குறைதீர் சிறப்பு முகாமில் போலீஸ் கமிஷனர் அருண் கலந்து கொண்டு, பெருநகர காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை, சிறப்பு பிரிவுகளின் பணியாற்றும் போலீசாரிடம் மனுக்களை பெற்றார்.

அந்த வகையில், 4 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ்ஐக்கள் உட்பட 90 போலீசாரிடம் கமிஷனர் அருண் நேரடியாக மனுக்கள் பெற்றார். காவலர்கள் அளித்த புகார் மனுக்களில் பெரும்பாலானவை பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த சிறப்பு முகாமில் தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரட்கர், நிர்வாக பிரிவு துணை கமிஷனர் சுப்புலட்சுமி, காவலர் நலன் துணை கமிஷனர் மேகலினா ஐடன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement