தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளியூர் கால்நடைகள் வரத்தின்றி வெறிச்சோடிய பொய்கை மாட்டுச்சந்தை விற்பனை கடும் சரிவு பெஞ்சல் புயல் மழை எதிரொலி

வேலூர், டிச.4: பெஞ்சல் புயல் மழை காரணமாக கால்நடைகள் வரத்தின்றி பொய்கை மாட்டுச்சந்தை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தின் பிரபலமான கால்நடை சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தையும் ஒன்று. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கூடும் இச்சந்தைக்கு வேலூர் மாவட்டம் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், கரந்ாடக மாநிலம் கோலார் மாவட்டங்களில் இருந்தும் கறவை மாடுகள், காளைகள், உழவு மாடுகள், ஆடுகள், கோழிகள் ஆகியன விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சீசன் நேரங்களில் ₹1 கோடி வரையும், சாதாரண நாட்களில் ₹50 லட்சம் வரையும் விற்பனையாகும். ஆனால் நேற்று பொய்கை மாட்டுச்சந்தை உள்்ளூர் கால்நடை வியாபாரிகளால் வெறும் 200 கறவை மற்றும் உழவு மாடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. விற்பனை என்பது ₹5 லட்சத்துக்கும் கீழே சரிந்ததாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பாக கால்நடை வியாபாரிகள் கூறும்போது, ‘கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் புயல் மழை தீவிரம் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் பொய்கை மாட்டுச்சந்தைக்கு எதிர்பார்த்த அளவில் கால்நடைகள் வரத்து இல்லை’ என்றனர்.

Advertisement

Advertisement