Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆலத்தூரில் வாகனம் மோதி இறந்தவர் அடையாளம் தெரிந்தது

பாடாலூர், ஜூன் 29: ஆலத்தூரில் வாகனம் மோதி இறந்தவர் அடையாளம் தெரிந்தது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் கடந்த 26ம்தேதி 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் மீது வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வந்தனர். பின்னர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மருதடியை சேர்ந்த கண்ணன்(60), சென்ட்ரிங் தொழிலாளி என்பது தெரியவந்தது.

மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.