தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.28.50 லட்சத்தில் புதிய வகுப்பறை: பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்

பெரம்பலூர், டிச. 3: பெரியம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ரூ.28.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் திறந்துவைத்தார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெரியம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.28.50 லட்சம் மதிப்பில் புதிதாக 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று 2ம் தேதி திங்கட்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்டகல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அய்யாசாமி தலைமை வகித்தார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மலர்க்கொடி வரவேற்றார். விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், 2-புதிய வகுப்பறை கட்டிடங்களைத் திறந்துவைத்தார்.

Advertisement

விழாவில் அட்மா தலைவர் ஜெகதீசன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தழுதாழை பாஸ்கர், திமுக (மேற்கு) ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, வேப்பந்தட்டை ஒன்றியக்குழு துணைத் தலைவர் ரெங்கராஜ், வேப்பந்தட்டை வட்டார கல்வி அலுவலர்கள் அம்சவள்ளி, இளங்கோவன், பெரியம்மாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சரண்யா முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் நடராஜ், ஜான்சி, அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஐடிகே தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளி உதவி ஆசிரியர் நடராசன் நன்றி கூறினார்.

Advertisement

Related News