Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இளநீர் விற்பனை படுஜோர்... கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரிப்பு: நண்பகல் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்லக்கூடாது

அரியலூர், மே 25: கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நண்பகல் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்ல கூடாது என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

அரியலூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து அதிகவெப்ப நிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும் பொருட்டு அரியலூர் மாவட்ட கலெக்டர் மூலம் கீழ்கண்டவாறு தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட தெரிவிக்கப்படுகிறது.