Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

செந்துறை அருகே முள்ளுக்குறிச்சி கிராமத்தில் பொக்ளைன் மூலம் மணல் திருட்டு

அரியலூர், ஜூலை 23: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி கிராமத்தில் உள்ள வெள்ளவாரி ஓடை பாலத்துக்கு அருகே சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் பொக்ளைன் எந்திரம் மூலம் மண்வெட்டி கொண்டிருந்தார். இதனை கண்ட அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித் என்பவர் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். இதனை ஆதாரமாக கொண்டு, தளவாய் காவல் நிலையத்திற்கு சென்று ரஞ்சித் புகார் அளித்தார்