Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலெக்டர் அலுவலக சாலையில் பரபரப்பு: செட்டிகுளம் சார்பதிவாளர் சுற்றுச்சுவர் சுற்றிலும் குப்பை குவியல்

பாடாலூர், ஜூன் 23: செட்டிகுளம் சார்பதிவாளர் சுற்றுச்சுவர் சுற்றிலும் குப்பை குவிந்து கிடக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. அலுவலகம் சுற்றி பாதுகாப்பதற்காக சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இந்தச் சுற்றுச்சுவர் அருகே குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள், சாலை ஓரங்களில் குப்பை குவிந்து கிடப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினந்தோறும் சிரமப்பட்டு செல்கின்றனர். இந்த குப்பை கழிவுகளில் இருந்து வெளியேறு துர்நாற்றத்தால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கொசுகள் அதிகளவு உற்பத்தியாகி பொதுமக்களுக்கு மலேரியா, டைப்பாய்டு போன்ற காய்ச்சல் பரவ காரணமாகி விடுகிறது.

இந்த வழியாக பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், முதியவர்கள், கர்பிணி பெண்கள், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்கின்றனர். அப்படி செல்லும்போது குப்பை கழிவுகளிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் மூக்கை மூடிக்கொண்டு செல்கின்றனர். தொற்று ஏற்படுவதற்கு முன் குப்பை கழிவுகளை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.