Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கலெக்டர் தகவல் அரியலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மண் பானைகளை பயன்படுத்தும் மக்கள்

ஜெயங்கொண்டம், மே 7: அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சோழமாதேவி புதுச்சாவடி குறவடையான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மண்பாண்டங்கள் செய்து வருகின்றனர். காலத்திற்கு ஏற்ப வெயில் காலங்களில் உபயோகப்படும் திறந்து மூடுவது போல் பைப் வைத்த பானைகள், ஆப்பசட்டி, பானையின் மூடி, டம்ளர், ஒரு லிட்டர் தண்ணீர் பிடிப்பது போன்ற ஜக், மண் அடுப்பு போன்றவைகளை தயார் செய்து வருகின்றனர். கார்த்திகை மாதங்களில் அகல் விளக்குகள் தயார் செய்யும் பணியும் நடைபெறுகின்றன. மற்ற காலங்களில் செய்யப்படும் மண்பானையில் சிறு சிறு கண்ணுக்குத் தெரியாத அளவில் துவாரங்கள் இருக்கும்.

வெளியில் உள்ள வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த நுண்துவாரங்கள் வழியாக பானையின் வெப்பமும், தண்ணீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாவதன் மூலம் வெளியேற்றப்படுகிறது. அதனால்தான் மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீர் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கிறது. மண் பாண்டத்தில் சமைப்பதால், வெப்பம் சீராக பாத்திரம் முழுவதும் பரவுகிறது. மேலும், நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை மண்பாண்டங்களுக்கு இருப்பதால், உணவு சூடாகவே இருக்கும். அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது. பாத்திரம் முழுவதும் வெப்பம் மெதுவாகப் பரவுவதால், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே நிலைத்திருக்கின்றன. இதுவே மண்பாண்டத்தில் சமைக்கப்படும் உணவு கூடுதல் சுவையுடன் இருப்பதற்கு முக்கியக் காரணம். மண் பாண்டங்களில் ஆல்கலைன்கள் நிறைந்துள்ளன. இவை தண்ணீரின் அமிலத்தன்மையோடு இணைந்து, உடலின் pH தன்மையை சமன் செய்கிறது. நீரில் அமிலத்தன்மை சமன் செய்யப்படுவதால், வாயுத்தொல்லைகள் நீங்கும்.

மண் பாண்டங்களில் சேமிக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்துவது ஜீரண உறுப்புகள் சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. மேலும், தசைகள் வளர்ச்சி, எலும்புகள் மண்டலத்தை உறுதியாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியக் காரணியாகச் செல்படும் டெஸ்டோஸ்டெரோன் அளவை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது. மண் பாண்டத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைப் பருகுவது, சன் ஸ்டோக்கில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. மற்றொரு நன்மை என்னவென்றால், தொண்டையில் நோய் தொற்று உள்ளவர்கள் இதனைப் பருகுவதால், தொற்று நீங்கி குணமடைவர். வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் நம்மைத் தாக்காமல் இருக்க மண்பாண்டங்களே சிறந்தவை. பலவித நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும் மண்பாண்டங்கள், கோடை காலத்திற்கு மட்டுமல்ல, எல்லா காலங்களுக்கும் ஏற்றது. கடந்த காலத்தில் அனைவரது வீட்டிலும் மண் பாண்டங்களை பானை சட்டி செம்பு போன்றவைகளை உபயோகப்படுத்தினர். தற்போது மிகவும் வசதி படைத்தவர்கள் மண்பாண்டங்களை மாற்று உறுப்புகளாக மாற்றி அதனை உபயோகப்படுத்தி வருகின்றனர். பானைகளில் குடிக்கக்கூடிய தண்ணீர் மிகவும் ருசியாகவும் இருப்பது அனைவரும் அறிந்ததே.