அலுவலகத்துக்கு பைக்கில் சென்றபோது வேகத்தடையில் நிலைதடுமாறி நகைக்கடை மேலாளர் பலி
Advertisement
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் சில தினங்களாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையால் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடைக்கு கருப்பு-வெள்ளை நிற பெயின்ட் அடிப்பதில்லை. வேகத்தடை உள்ளது என அறிவிப்பு பலகையும் வைப்பதில்லை. தற்போது, உயிரிழப்பு ஏற்பட்டவுடன் பெயின்ட் அடிப்பதும், அறிவிப்பு பலகை வைப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
Advertisement