தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசை கண்டித்து வடசென்னை தமிழ் சங்கம் ஆர்ப்பாட்டம்

Advertisement

பெரம்பூர்: ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கையை கண்டித்தும், இந்தி திணிப்பை கைவிடக் கோரியும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்டவை தொடர்ந்து ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். வடசென்னை தமிழ் சங்கம் சார்பில் கல்விக்கான நிதியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், இந்தி மொழியை திணிப்பதை கண்டித்தும், தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்க ஒன்றிய அரசு முயல்வதாக குற்றம் சாட்டியும் நேற்று காலை வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரி எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன.

வடசென்னை தமிழ் சங்கத்தின் தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், திராவிட கழக வடசென்னை மாவட்ட தலைவர் தளபதி பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் உஷாராணி, அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement