Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசை கண்டித்து வடசென்னை தமிழ் சங்கம் ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கையை கண்டித்தும், இந்தி திணிப்பை கைவிடக் கோரியும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்டவை தொடர்ந்து ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். வடசென்னை தமிழ் சங்கம் சார்பில் கல்விக்கான நிதியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், இந்தி மொழியை திணிப்பதை கண்டித்தும், தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்க ஒன்றிய அரசு முயல்வதாக குற்றம் சாட்டியும் நேற்று காலை வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரி எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன.

வடசென்னை தமிழ் சங்கத்தின் தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், திராவிட கழக வடசென்னை மாவட்ட தலைவர் தளபதி பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் உஷாராணி, அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.