Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னிமலை அருகே முதியவர் மயங்கி விழுந்து சாவு

சென்னிமலை, மே 15: சென்னிமலை அருகே ஈங்கூர், கிழக்கு வீதியை சேர்ந்தவர் முத்துசாமி (70). இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பாய்லர் எரிக்கும் வேலை செய்து வந்தார்.

நேற்று அதிகாலை வழக்கம்போல் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது பாத்ரூம் சென்ற முத்துசாமி மயங்கி கீழே விழுந்துவிட்டார். உடனடியாக முத்துசாமியை நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே முத்துசாமி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.‌

இறந்து போன முத்துசாமிக்கு பொங்கியம்மாள் (65) என்ற மனைவியும், பரிமளம் (41) மற்றும் பானுப்பிரியா (40) ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.