Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

நெலாக்கோட்டை பஜார் பகுதியில் அடிக்கடி உலாவரும் ஒற்றை காட்டு யானை

பந்தலூர், மே 7: பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பஜார் பகுதியில் அடிக்கடி உலாவரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டம், பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட நெலாக்கோட்டை பஜார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகம் பகுதியை ஒட்டி நெலாக்கோட்டை அமைந்துள்ளதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளிறும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

கடந்த பல மாதங்களாக இந்த பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை ஒன்று அடிக்கடி நெலாக்கோட்டை பஜார் மற்றும் குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அடிக்கடி உலாவரும் இந்த காட்டு யானையை வனத்துறையினர் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.