Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயில் மோதி தொழிலாளி பலி

ஈரோடு, மே 16: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள எலக்ட்ரிக் ரயில்வே பணிமனை அருகே ரயில் மோதி ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், ஈரோடு ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் அங்கு விரைந்து சென்று, காயம் அடைந்து மயங்கி கிடந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இறந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் சத்தீஸ்கர் மாநிலம் பிளாக்பூரை சேர்ந்த நந்தாபு கொடகு (40) என்பதும், தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நந்தாபு கொடகின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.