தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டியில் கடும் மேக மூட்டம் சாரல் மழையால் குளிர்

ஊட்டி, நவ. 12: ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மேக மூட்டம் மற்றும் சாரல் மழையால் குளிர் அதிகரித்துள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் துவங்கினாலே பனியின் தாக்கம் இருக்கும். இரண்டாவது வாரத்திற்கு மேல் உறை பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். இதுபோன்ற சமயங்களில் அதிகாலை நேரங்களில் கடும் பனி மூட்டம் காணப்படும். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்வது வழக்கம்.

Advertisement

ஆனால், பகல் நேரங்களில் வானம் தெளிவாக இருக்கும். மீண்டும் மாலையில் பனி மூட்டம் காணப்படம். இது போன்ற சமயங்களில் கடும் குளிர் நிலவும். இம்முறை கடந்த மூன்று மாதங்களாக மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் சில நாட்கள் மழை குறைந்து நீர் பனி காணப்பட்டது. பகல் நேரங்களில் வெயில் அதிகமாக காணப்பட்டது. ஆனால், கடந்த மூன்று நாட்களாக பகலில் வெயில் குறைந்து மேகமூட்டம் காணப்பட்டது.

நேற்று ஊட்டியில் பகலிலேயே கடும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை காணப்பட்டது. மேலும், புற நகர் பகுதிகளிலும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்தது. இதனால், ஊட்டியில் கடும் குளிர் நிலவியது. குளிரால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகிறார்கள். இந்த மாறுபட்ட காலநிலையால், பொதுமக்கள் மட்டுமின்றி, விவசாய பயிர்களும் பாதித்துள்ளன.

 

Advertisement