Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கட்டிடப்பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பாலக்காடு,மே1: கட்டிடப்பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருப்பிரையாறு அடுத்த சாழுர் கிராமப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிரய்க்கல் மாட்டுமல் பகுதியைச் சேர்ந்தவர் நிகில்பாபு (34). இவர் புதிய கட்டிடங்களில் டைல்ஸ் ஓட்டும் வேலைகள் செய்வார். இவருக்கு அனுஸ்ரீ என்ற மனைவி உள்ளார்.

இவர் நேற்று முன்தினம் சிரய்க்கல் பகுதியில் ஒரு கட்டிடத்தில் டைல்ஸ் பதிக்கின்ற பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டிங் மெஷின் உபயோகித்து டைல்ஸ்களை கட்டிங் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சேர்ப்பு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் நிகில் பாபு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சேர்ப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.