Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பைக்கில் சென்றவர் தவற விட்ட பர்ஸ் ஒப்படைப்பு

பணகுடி,மே 25: வடக்கன்குளம் அருகே பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசெல்வன். சம்பவத்தன்று இவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது அய்யா கோயில் அருகே மணிபர்ஸ் சாலையில் தவறி விழுந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் சாலையில் பர்ஸ் கிடப்பதை பார்த்துள்ளார்.

அதனை எடுத்து பார்த்த போது அதில், ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரிஜினல் ஆவணங்கள் இருந்தது. அதில் இருந்த அடையாள ஆவணங்களை வைத்து ஊரில் உள்ள நண்பர்களிடம் செல்ேபான் பேசியதோடு, சம்பந்தப்பட்ட நபர் பர்ஸ்சை என்னிடம் வந்து பெற்று சொல்லும்படி தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்துச்செல்வன் மணிபர்ஸ்சை பெற்றுக்கொண்டார்.