கேடிசி நகர், ஆக.5: நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கீரன்குளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் சங்கர் (23). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று குடும்பத்தகராறு காரணமாக சங்கர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் இங்கு சிகிச்சை பலனின்றி இரவிலேயே சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி Aவருகின்றனர்.


