Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துவக்கம் சங்கரன்கோவில் சங்கரன்கோவில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 5 முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

ஜூன்3: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-27ம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு பி.ஏ ஆங்கிலம் 64, சமூகவியல் 64, பி.காம் (வணிகவியல்) 64, பி.எஸ்ஸி கணினி அறிவியல் 48, பி.எஸ்ஸி புள்ளியியல் - 48 ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற ஜூன் 5ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கல்லூரி முதல்வர் (பொ) கோ.வேணுகோபால் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் உத்தரவின்படி கல்லூரியில் உள்ள 288 காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் கல்லூரி இணையதளத்தில் (https://gascskovil.edu.in) வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 5ம் தேதி நடைபெறும் எனவும், இதில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தமிழ்மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 8 முதல் தொடங்கி, மதிப்பெண் தரவரிசை மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் ஜூன் 8ம் தேதி காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தொடர்ச்சியாக காலியாக உள்ள இடங்களுக்கு தொடர் கலந்தாய்வு மூலம் மாணாக்கர் சேர்க்கை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் விண்ணப்பப் படிவம், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10,11 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப்புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2 ஆகிய அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் தலா இரண்டு நகல்களுடன் பெற்றோருடன் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் எனவும், தேர்வு செய்யப்படும் மாணவர்கள் கல்லூரி கட்டணத்தை அலுவலகத்தில் செலுத்திய பின்னரே சேர்க்கை உறுதிசெய்யப்படும் எனவும், இளநிலைப்படிப்பில் சேர விரும்பும் விண்ணப்பித்த மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்லூரியில் சேர்ந்து பயனடைய வேண்டுமென கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.