தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

39 திமுக நிர்வாகிகளுக்கு கலைஞர் குடும்ப நலநிதி

சேந்தமங்கலம், நவ.12: கொல்லிமலை ஒன்றியத்தில், மறைந்த திமுக நிர்வாகிகள் 39 பேரின் குடும்பத்தினருக்கு, கலைஞர் குடும்பநல நிதியை ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார். கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளில், மறைந்த திமுக நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு, கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞர் குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார். ஊராட்சி பொறுப்பாளர்கள் பாலசுந்தரம், பழனிசாமி, வெங்கடாஜலம் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி கலந்துகொண்டு, மறைந்த திமுக நிர்வாகிகள் 39 பேரின் குடும்பத்தினருக்கு கலைஞர் குடும்ப நல நிதியை வழங்கினார்.

Advertisement

அப்போது அவர் பேசுகையில், ‘கிழக்கு மாவட்ட திமுக சார்பில், திமுக நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு திருமணத்திற்கு தங்க நாணயம், கல்லூரியில் படிக்க செல்லும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, மறைந்த நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு கலைஞர் குடும்ப நலநிதி, உடல் நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவ நலநிதி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், மாவட்ட திமுக அலுவலகத்தை தொடர்பு கொண்டால், பிரதமர் காப்பீடு திட்டத்தின் மூலம், இலவசமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். இந்த நிகழ்ச்சியில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் காளியப்பன், வழக்கறிஞர் ஆனந்தபாபு, சித்தார்த், கிருபா, கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement