Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வகுரம்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகள்

நாமக்கல், ஜூன் 25: நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வகுரம்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நாமக்கல் மாநகராட்சியுடன் கடந்த ஆண்டு 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டது. இதில், வகுரம்பட்டி ஊராட்சியும் ஒன்றாகும். இந்த ஊராட்சியில் உள்ள பொன்விழா நகர், மாருதி நகர் மற்றும் பசுமைநகர் பகுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள் ஏற்படுததப்படவில்லை. குடிநீர் பிரச்சனை, சுகாதார குறைபாடு போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பாக பொன்விழா நகரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் காந்தி(எ) பெரியண்ணன், பெரியசாமி ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் நேற்று மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:நாமக்கல் பொன்விழா நகர், மாருதி நகர் மற்றும் பசுமை நகர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி ஊராட்சியாக இருந்த காலத்தில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள், சுகாதார பணிகள் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கடந்த ஒரு ஆண்டு காலத்தில், சாக்கடை தூர்வாருதல், குடிநீர் விநியோகம் போனற் அடிப்படை பணிகள் சரிவர நடைபெறாமல் உள்ளது.