Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராசிபுரம் ஜி.ஹெச்.,ல் அதிகாரிகள் ஆய்வு

ராசிபுரம், மே 9: ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மலேரியா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலேரியா காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மலேரியா பரவலை தடுக்க பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார நிறுவன (டபிள்யூ.எச்.ஓ.,) அதிகாரி டாக்டர் சம்பாநாத் உள்ளிட்ட அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மலேரியா பாதிப்புகள் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து, அங்கிருந்த மருத்துவர்கள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

ராசிபுரம் மருத்துவமனையில் மட்டுமின்றி கொல்லிமலை, பேளுக்குறிச்சி உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த 6 மாதங்களில் மலேரியா பாதிப்பு யாருகேனும் உள்ளதா, அதற்கான முறையான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அவர்கள் விவரங்களை சேகரித்தனர். மலேரியா பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து அதிகாரிகளிடம் டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.