Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மது பதுக்கி விற்றவர் கைது: 40 பாட்டில்கள் பறிமுதல்

சேந்தமங்கலம், ஜூலை 3: புதுச்சத்திரம் அருகே கள்ளத்தனமாக மது விற்றவரை போலீசார் கைது செய்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். புதுச்சத்திரம் அடுத்த நவணி தோட்டக்கூர்பட்டி தனியார் பெட்ரோல் பங்க் பின்புறத்தில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக புதுச்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையிலான போலீசார், அங்கு சென்று சோதனையிட்ட போது, அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த யூனியன் ஆபீஸ் தெருவை சேர்ந்த ஜீவா (42) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.