Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வாடகைக்கு ஓடிய 2 கார்கள் பறிமுதல்

திருச்செங்கோடு, ஜூலை 1: திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகனப்பிரியா மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் இணைந்து, திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, 20க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு பல்வேறு விதி மீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டது. இதில் இரண்டு சொந்த பயன்பாட்டிற்கு பயன்படும் கார்களை, வாடகைக்கு இயக்குவது கண்டறிந்து, இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இவ்வாறு சொந்த பயன்பாட்டிற்கு வாங்கி பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்படுவது தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தொடர்ந்து இதுபோன்ற வாகன சோதனை நடத்தப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் மோகனபிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.