Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

இஸ்லாமியர்களுக்கு 7% தனி இட ஒதுக்கீடு

குத்தாலம், மே18: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே தேரழந்தூரில் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் சார்பில் அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாவட்டதலைவர் அப்துல் ஹமீது தலைமை வகித்தார். மாநில தலைவர் அப்துல்கரீம் கலந்துகொண்டு இறைத்தூதரின் இறுதி பேருரை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அண்ணலார் கற்றுத்தரும் அழகிய இல்லறம் என்ற தலைப்பில் பாத்திமா ஆலிமா, விரல் நுனியில் சொர்க்கம் நரகம் என்ற தலைப்பில் பேச்சாளர் நெல்லை மைதீன் ,அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி ஆகியோர் பேசினர்.

இதில் தமிழகத்தில் பூரணமதுவிலக்கை புதிய அரசு அமல்படுத்த வேண்டும், இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு 7 சதவிகிதமாக உயர்த்த வேண்டும், நீட் தேர்வு முறைகேடுகளை களைய வேண்டும், தேர்தலில் பழையமுறைப்படி மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும், வணிக சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் முஹம்மது இயாஸ் நன்றி கூறினார்.