Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிரவி பகுதியில் பைக்கிலிருந்து தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

காரைக்கால், மே 16: காரைக்காலை அடுத்த நிரவி கோயில்பத்து பகுதியில் வசித்து வந்தவர் செல்வகணபதி (66). இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் சுரக்காயூர். கடந்த சில ஆண்டுகளாக இவர் வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு 8 15 மணிக்கு, மது போதையில் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்த பொழுது, நிரவி முதல் சாலை ஓஎன்ஜிசி கேட் அருகே, நிலை தடுமாறி சாலையில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வ கணபதி உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உறவினர் குமாரசாமி காரைக்கால் திருப்பட்டினம் சாலை போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மூன்று பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.