சீர்காழி, மே 1: சீர்காழி சீரடி சாய்பாபா கோயில் வியாழக்கிழமையான நேற்று நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் ஸ்ரீ சீரடி சாய் பாபா தியான கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு கோயில் கடம் புறப்பாடு, கடம் அபிஷேகம் தொடர்ந்து ஆரத்தி நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சாய்பாபா டிரஸ்ட் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்



