நாகப்பட்டினம், டிச. 10: சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.
விருதாளர் முதல்வரால் தேர்வு செய்யப்படுகிறார். 2025ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்வு செய்ய பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தை கலெக்டருக்கு அனுப்பி வைக்கலாம்.


