தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழைக்காலத்தில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணி செய்ய வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்: திருவிக நகர் மண்டல குழு கூட்டத்தில் அறிவிப்பு

Advertisement

பெரம்பூர்: வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பு வார்டு குழு கூட்டம் நேற்று திருவிக நகர் மண்டல அலுவலகத்தில் நடந்தது. திருவிக நகர் மண்டல சிறப்பு கண்காணிப்பு அலுவலர் கணேசன் ஐஏஎஸ் தலைமை வகித்தார். கூட்டத்தில் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டல குழு தலைவர் சரிதா, மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளர்கள் செந்தில்நாதன், சரவணன் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் எந்தெந்த பகுதியில் அதிகமாக தண்ணீர் தேங்குகிறதோ அந்த பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டால் அந்தந்த வார்டுகளிலேயே சமையல் செய்வதற்கான இடங்களை தேர்வு செய்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன. மழைக்காலத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணி செய்ய தனித்தனியாக வாட்ஸ்அப் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Advertisement

Related News