தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொழில் தொடங்குவதாக கூறி ₹1 கோடி மோசடி செய்தவர் கைது: போலி நிறுவனத்தை நடத்தி பலபேரிடம் கைவரிசை

ஆவடி, ஜன. 30: கெருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (44). ஆட்டோமொபைல் துறையில் வேலை செய்து வரும் இவர் தொழில் ஆலோசகராகவும் உள்ளார். இவர் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2022ம் ஆண்டு, ஆட்டோமொபைல் குறித்த ஆலோசனை கூட்டத்தின்போது, தரன் (55) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நான் கண்டுபிடித்த எந்திரத்தை பற்றி தெரிந்துகொண்டு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஷோரும் தொடங்கி தொழில் புரிய வேண்டும் என்று கூறி என்னை வற்புறுத்தினார். மேலும் தொழில் தொடங்குவதற்காக ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் எனவும் கூறினார். அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல் 2023 ஜனவரி வரை வங்கி பணபரிவர்த்தனை வாயிலாக ₹78.32 லட்சமும், நேரடியாக ₹27.75 லட்சமும் என மொத்தமாக ₹1.06 கோடி கொடுத்தேன். ஆனால் பல மாதங்களாகியும் ஷோரூமை தொடங்காமலும், பணத்தை திருப்பி தராமலும் அவர் ஏமாற்றி வந்தார்.

Advertisement

மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், திருச்சியில் தலைமறைவாக இருந்த தரனை நேற்று முன்தினம் மாலை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். இதில், தரன் மீது பெங்களூரு மற்றும் ஆந்திராவில் மோசடி வழக்குகள் உள்ளதாகவும், திருச்சியில் கடந்த சில மாதங்களாக தங்கி இருந்து, போலி நிறுவனத்தை தொடங்கி, அதன் வாயிலாக பல பேரிடம் பல லட்சம் மோசடி செய்ததும் தெரிய வந்தது. பின்னர் போலீசார், தரனை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News