Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தொழில் தொடங்குவதாக கூறி ₹1 கோடி மோசடி செய்தவர் கைது: போலி நிறுவனத்தை நடத்தி பலபேரிடம் கைவரிசை

ஆவடி, ஜன. 30: கெருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (44). ஆட்டோமொபைல் துறையில் வேலை செய்து வரும் இவர் தொழில் ஆலோசகராகவும் உள்ளார். இவர் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2022ம் ஆண்டு, ஆட்டோமொபைல் குறித்த ஆலோசனை கூட்டத்தின்போது, தரன் (55) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நான் கண்டுபிடித்த எந்திரத்தை பற்றி தெரிந்துகொண்டு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஷோரும் தொடங்கி தொழில் புரிய வேண்டும் என்று கூறி என்னை வற்புறுத்தினார். மேலும் தொழில் தொடங்குவதற்காக ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் எனவும் கூறினார். அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல் 2023 ஜனவரி வரை வங்கி பணபரிவர்த்தனை வாயிலாக ₹78.32 லட்சமும், நேரடியாக ₹27.75 லட்சமும் என மொத்தமாக ₹1.06 கோடி கொடுத்தேன். ஆனால் பல மாதங்களாகியும் ஷோரூமை தொடங்காமலும், பணத்தை திருப்பி தராமலும் அவர் ஏமாற்றி வந்தார்.

மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், திருச்சியில் தலைமறைவாக இருந்த தரனை நேற்று முன்தினம் மாலை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். இதில், தரன் மீது பெங்களூரு மற்றும் ஆந்திராவில் மோசடி வழக்குகள் உள்ளதாகவும், திருச்சியில் கடந்த சில மாதங்களாக தங்கி இருந்து, போலி நிறுவனத்தை தொடங்கி, அதன் வாயிலாக பல பேரிடம் பல லட்சம் மோசடி செய்ததும் தெரிய வந்தது. பின்னர் போலீசார், தரனை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.