மதுரை. மே 16: மதுரை ஒத்தக்கடை வவ்வால் தோட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் (24). இவர் கோயம்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் உடலில் கட்டி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். அதற்கான சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இந்நிலையில் வலி தாங்க முடியாமல் கார்த்திக் விவசாய கல்லூரி வளாகத்துக்குள் புளியமரத்தில் தூக்குந்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரில் ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
