தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

மதுரை, நவ. 12: இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட வாலிபர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை சிந்தாமணி அழகர்நகரை சேர்ந்த வாலிபர் உமாமகேஸ்வரன்(19). இவர் அப்பகுதியில் உள்ள தெருவில் நவ.9ம் தேதி அன்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணி மேட்டு புஞ்சையை சேர்ந்த சொக்கலிங்கம் மனைவி பாண்டியம்மாள் இறந்தவரின் உடலுடன் இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது.

Advertisement

அப்போது பலரும் பட்டாசு வெடித்தும், மாலைகளில் இருந்த பூக்களை பிய்த்து எறிந்தும் கொட்டு மேளத்துடன் உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது வெடித்த பட்டாசு உமாமகேஸ்வரன் மீது பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டபோது, அவரை, ஊர்வலத்தில் சென்ற சிந்தாமணியை சேர்ந்த அழகுராஜா(23), கருப்புசாமி (எ) ராஜா(33), பாண்டீஸ்வரன்(25) மற்றும் சரவணன்(23) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து கீரைத்துறை போலீசில் உமாமகேஸ்வரன் நவ.10ம் தேதி அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement