Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரை அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார உயர்மட்ட குழு ஆய்வு

மதுரை, ஜூன் 19: மதுரையில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழான பல்வேறு முக்கிய மருத்துவத் திட்டங்களைக் கண்காணித்து, மதிப்பீடு செய்திட தேசிய சுகாதாரக் உயர்மட்டக்குழுவி்ன் மூத்த மண்டல இயக்குனர் டாக்டர் நிர்மல் ஜோ, மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் ஐஸ்வர்யா, மதிப்பீட்டு உதவியாளர் ராதா ஆகியோர் மதுரை வந்துள்ளனர். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரடி கள ஆய்வு செய்து, ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து இக்குழு கேட்றிந்து வருகிறது. ஒன்றிய அரசின் தாய்-சேய் நலத் திட்டங்கள் மற்றும் தொற்றா நோய்கள் தடுப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் தரம் உயர்த்தும் நோக்கில் இந்த கள ஆய்வு நடக்கிறது. இந்நிலையில் இக்குழுவினர் மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு நடத்தினர்.

குழந்தைகள் நலப்பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும், நோயாளிகளிடம் குறை, நிறைகள் கேட்டறிந்தனர். டீன் அருள்சுந்தரேஸ்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நிலைய மருத்துவ அதிகாரி சரவணன் உள்ளிட்ட பல்வேறு துறை தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து குழுவினர் அனைத்து மருத்துவத் துறை உயர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவதாக மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் தெரிவித்துள்ளார்.