Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மதுரை கஞ்சா வியாபாரி ஆயுதங்களுடன் கைது

வில்லிபுத்தூர், ஜூன் 9: விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது தனியார் மேன்ஷன் அருகே மூன்று பேர் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்ததில் மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இரண்டு பெரிய வாள்களும் இருந்தது. அவர்களிடம் இருந்த 180 கிராம் கஞ்சா, 2 வாள்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் மதுரையை சேர்ந்த சரவணன் (24), கமுதியை சேர்ந்த சதீஷ்குமார் (27) ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய போடியை சேர்ந்த தருண் என்பவரை தேடி வருகின்றனர். ஆயுதங்களுடன் கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.