Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மக்களுக்கான போராட்டங்களில் திமுக அதிகளவில் ஈடுபடும்: சேடபட்டி மணிமாறன் எம்எல்ஏ தகவல்

திருமங்கலம் ஆக.4: மக்களுக்கான போராட்டங்களில் திமுக அதிகளவில் ஈடுபடும் என சேடபட்டி மணிமாறன் எம்எல்ஏ தெரிவித்தார். திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டிலுள்ள திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவுமான சேடபட்டி மணிமாறன் அலுவலகத்தை திறந்துவைத்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் ஏர்போர்ட் பாண்டியன், சிவனாண்டி, பொருளாளர் நிரஞ்சன், பொதுக்குழு உறுப்பினர்கள் சிவமுருகன், பிஎஸ்என்எல் செல்வம், திருமங்கலம் நகர செயலாளர் தர், நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான், ஒன்றிய செயலாளர்கள் ஆலம்பட்டி சண்முகம், தனபாண்டியன், மதன்குமார், முத்துராமன், பாண்டியன், பெரியசாமி, பழனி, அணி அமைப்பாளர்கள் தங்கசாமி,

செல்வேந்திரன், ஆலங்குளம் செல்வம், கவிதினேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் சின்னசாமி, ரம்ஜான்பேகம் ஜாகீர், நகர நிர்வாகிகள் செல்வம், ஹரி, தொமுச பால்பாண்டி, பொறுப்பாளர் அலாவுதீன், பிரதிநிதி உச்சப்பட்டி ரஞ்சித்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் முத்துபாண்டி, மதுரபாண்டி, தேமுதிக ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், நகர செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் எம்எல்ஏ சேடபட்டி மணிமாறன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘திமுகவினர் தொடர்ந்து கட்சி பணிகளை பார்த்து வருகிறோம். மக்களுக்கான போராட்டங்களில் அதிகளவில் ஈடுபடுவோம். எதிர்க்கட்சியாக இருக்கும் போது அதிகளவில் திமுக போராட்டங்களில் ஈடுபடும். அதுவும் தொடரும். விரைவில் மீண்டும் திமுக ஆட்சி அமையும். இவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின்வெட்டு அதிகளவில் உள்ளது. இன்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழாவில் கூட ஒரு மணிநேரம் மின்தடை ஏற்பட்டது’’ என தெரிவித்தார்.