தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொழிலாளர் நலத்துறை சார்பில் மாதவரத்தில் 14ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

Advertisement

திருவொற்றியூர்: தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 14ம் தேதி, மாதவரம் பொன்னியம்மன்மேடு, ஜிஎன்டி சாலையில் உள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சி கணேசன் தலைமை வகித்தார்.

மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ கலந்துகொண்டு, தொழில் துறையில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல் ஆகியோர் செய்து வரும் பல்வேறு திட்டங்களை விளக்கி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தீவிரமாக பணியாற்றி முகாம் வெற்றியடைய முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சென்னை மண்டல இணை இயக்குனர் தேவேந்திரன் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு முகாமில் எத்தனை நிறுவனங்கள் பங்கேற்கின்றன என்றும், வேலைவாய்ப்பு பெறுவதில் வழிகாட்டு முறைகள், ஏற்பாடுகள் குறித்தும் விளக்கினார். கூட்டத்தில் திமுக மாவட்ட, பகுதி, வார்டு நிர்வாகிகள், அமைப்பாளர்கள், மகளிரணி, மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் துணை இயக்குனர் மகேஸ்வரி, அலுவலர் சண்முகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News