Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 33,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி

நீடாமங்கலம், ஜூலை 23: நீடாமங்கலம் வேளாண் பகுதிகளில் சுமார் 33,000 ஏக்கரில் முன் பட்ட குறுவை சாகுபடியில் விவசாயிகள் நெற்பயிரில் களை எடுக்கும் பணியில் விவசாய பெண் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றர்.

நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் சுமார் 33,000 ஏக்கரில் முன் பட்ட குறுவை சாகுபடியை விவசாயிகள் தொடங்கி செய்து வருகின்றனர். இந்த சாகுபடியில் சிலர் நிலத்தடி நீரில் மின்மோட்டாரை கொண்டு பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு குறுவை சாகுபடியில் சுமார் சுமார் 33,000 ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடியை செய்து முடித்தனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் தொடங்கிய மழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் மேட்டூர் அணை முழு கொள்ளவு எட்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து பானத்திற்கு நீர் அதிகமாக திறக்கப்பட்டு கடைமடை வரை பாசன நீர் சரியானபடி வந்தடைந்து விவசாயிகள் குறுவைசாகுபடி பணியை மும்முரமாக தொடங்கியுள்ளனர்.

டெல்டா மாவட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் நீடாமங்கலத்தில் இருந்து கிழக்குப் பகுதியில் பெரும்பாலானோர் சம்பா சாகுபடியை தொடங்க அதற்கான வயல்களை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடி, தாளடி சாகுபடி, சம்பா மற்றும் கோடை சாகுபடி என நிலத்தடி நீரை பயன்படுத்தி சிலர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதியில் கோடை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தற்போது இயந்திர அறுவடைபணி முடியும் தருவாயில் உள்ளது. தற்போது முன் பட்ட குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ரிஷியூர், கண்ணம்பாடி, வரதராஜபெருமாள் கட்டளை, கட்டையடி, பெரம்பூர், அனுமந்தபுரம், சித்தமல்லி, ராயபூரம், காளாச்சேரி, மேலபூவனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோடை நடவுக்கு முடிந்து அறுவடை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து விவசாய தொழிலாளர்கள் முன்பட்ட குறுவை நெல்பயிரில் களை எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன் கூட்டியே விவசாயிகள் நடவு செய்த பல இடங்களில் நெல் பயிராகவும், அதற்கான களை எடுப்பு, உரமிடுதல், பூச்சி மருந்து அடிக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.