Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொழிற்சாலை பஸ்களால் போக்குவரத்து நெரிசல்

ராயக்கோட்டை, பிப்.5: ராயக்கோட்டை அருகே தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு ஏராளமான பஸ்கள் காலை, மதியம், மாலை வேளைகளில் இயக்கப்படுகிறது. அந்த பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்பதால் வேகமாகவும், வரிசையாகவும் சாலைகளில் சென்று வருகிறது. அதனால் உள்ளூர் மக்கள் முதல் அனைத்து மக்களும் சாலையை கடப்பதில் மிகுந்த அவதிபட்டு வருகின்றனர். பாதசாரிகளும், டூவீலர்களில் சாலையை கடப்பவர்களும் இதனால் பெரிதும் அவதிக்கு ஆளாகின்றனர். வேகமாக சென்ற வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.