Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோயில் விழாவில் எருதாட்டம்

போச்சம்பள்ளி, பிப்.4: போச்சம்பள்ளி வட்டம், மேட்டுபுலியூர், மோட்டூர், ஆட்டுகானூர், சாரகாரனூர் ஆகிய கிராமங்கள் ஒன்றிந்து மாரியம்மன் விழாவையொட்டி எருதாட்டத்தை நடத்தியது. காலை பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து பெண்கள் தட்டுவரிசையுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். அங்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாரியமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து எருதாட்டம் நடந்தது. முன்னதாக காளைகளுக்கு கோ பூஜை நடத்தப்பட்டு கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் காளையின் இருபுறமும் வடகயிறு கட்டி பொம்மைகளை காளைகளின் முன்பு காட்டி இளைஞர்கள் விளையாடினர். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.