கிருஷ்ணகிரி, டிச.3: வேப்பனஹள்ளி அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (37), மரம் அறுக்கும் கூலி தொழிலாளி. கடந்த 16ம் தேதி, நேரலகிரி அரசு பள்ளி அருகே உள்ள வேப்பமரத்தை அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதுபற்றி வேப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement

