Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 3: கிருஷ்ணகிரியில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 6வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று 6வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் பெருமாள் வாழ்த்தி பேசினார். மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பூபதி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர்கள் அறிவழகன், பாலசுப்பிரமணியன், மாவட்ட தலைவர்கள் பெரியசாமி, சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் வெங்கடேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை, நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம், காலமுறை ஊதியம் உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். செயலாளர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.