Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கார் மோதி தொழிலாளி பலி

சிதம்பரம், ஆக. 28: புதுச்சேரி கதிர்காமம் நேரு நகரை சேர்ந்தவர் முருகன்(62). இவர் தற்போது சிதம்பரத்தில் பெருமாள் தெருவில் தங்கி இருந்து மேல வீதியில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் முருகன் தனது மோட்டார் சைக்கிளில் சிதம்பரத்தில் இருந்து அருகே உள்ள வக்காரமாரி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது காட்டுமன்னார்கோவிலில் இருந்து சிதம்பரத்தை நோக்கி வேகமாக வந்த கார், முருகன் ஓட்டி வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி எறியப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.