Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ராயக்கோட்டையில் தேங்காய் மட்டை உரிக்கும் பணி மும்முரம்

ராயக்கோட்டை, மே 15: தேங்காய் விலை குறையாத நிலையில், ராயக்கோட்டை பகுதியில் மட்டை உரிக்கும் பணி மும்முரமாக நடைப்பெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் தென்பெண்ணை ஆற்று படுகையில் பரவலாக தென்னை சாகுபடி செய்துள்ளனர். எங்கு பார்த்தாலும் தென்னை மரங்கள் நிறைந்துள்ள நிலையில், தேங்காய் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மட்டை நீக்கிய தேங்காயை பொறுத்தவரை ரூ.30 முதல் ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதோடு மரங்களில் விடும் தேங்காயை முற்றும் வரை காத்திருக்காமல், பாதியிலேயே பறித்து இளநீராக விற்பனை செய்து வருகின்றனர். ஒரு இளநீர் ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் வைகாசி மாதம் தொடர் முகூர்த்தம் உள்ளதால் தேங்காய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக தோப்புகளில் குவித்து வைத்து மட்டை உரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.