Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கஞ்சா செடி வளர்த்த பெயிண்டர் கைது

தேன்கனிக்கோட்டை, மே 9: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள கம்பிகேமரதொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா(40). பெயிண்டரான இவர், தனது வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்ப்பதாக தளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று தளி எஸ்ஐ ராஜாசங்கிலி கருப்பன் தலைமையிலான போலீசார், அவரது வீட்டின் பின்புறம் சோதனை செய்ததில் இரண்டரை அடி உயரம் கொண்ட 10 கஞ்சாசெடி வளர்த்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கிருஷ்ணப்பாவை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் வழக்கு பதிவு செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.