தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயம்பேடு காய்கறி, பழம், பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிப்பிடங்களை இலவசமாக பயன்படுத்த உத்தரவு: வியாபாரிகள், பொதுமக்கள் அமைச்சருக்கு நன்றி

Advertisement

அண்ணாநகர்: கோயம்பேடு காய்கறி, பழம், பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிப்பிடங்களை இலவசமாக பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் 94 கழிவறைகள், 10 சிறுநீர் கழிப்பிடங்கள் உள்ளன. காய்கறி, பூ பழம் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிப்பிடங்களில் ஒப்பந்ததாரர்கள் மூலம் கழிப்பிடம் செல்ல ரூ.10, சிறுநீர் கழிப்பதற்கு ரூ.5 என வசூலித்தனர். குளித்து ஆடைகள் மாற்றுவதற்கு ரூ.30 வசூலித்தனர்.

இதுசம்பந்தமாக வியாபாரிகள், அங்காடி நிர்வாக அலுவலர் இந்துமதியை சந்தித்து, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள அனைத்து கழிப்பிடங்களும் இலவசமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காய்கறி, பூ பழம் ஆகிய மார்க்கெட்டில் உள்ள அனைத்து கழிப்பிடங்களும் இலவசமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அங்காடி நிர்வாக அலுவலர் இந்துமதி, அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தலைவருமான பி.கே.சேகர்பாபுவுக்கு பரிந்துரை செய்தார்.

இதை ஏற்று, மார்க்கெட்டில் உள்ள அனைத்து கழிப்பிடமும் இலவசமாக பயன்படுத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளார். அங்காடி நிர்வாகம் பொறுப்பேற்று கட்டணம் வசூலிக்காமல் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிப்பிடங்களை அங்காடி நிர்வாக அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். 24 மணி நேரமும் சுழற்சிமுறையில் சுத்தம் செய்யப்படும். திங்கட்கிழமை முதல் வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கழிப்பிடங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என அங்காடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அங்காடி நிர்வாகம் கூறுகையில், கோயம்பேடு காய்கறி, பூக்கள், பழம் ஆகிய மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிப்பிடங்களில் நேற்று முதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் வசூலித்தாலோ, கழிப்பிடங்களை சுத்தம் செய்யவில்லை என்றாலோ அங்காடி நிர்வாக அலுவலகத்தில் வியாபாரிகள் புகார் கொடுக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், மார்க்கெட் வளாகத்தில் உள்ள அனைத்து கழிப்பிடங்களும் திங்கட்கிழமை முதல் இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுத்த அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம் என கூறினர்.

Advertisement

Related News