Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தீராத பல் வலியால் முதியவர் தற்கொலை

கோவை, ஜூலை 16: கோவை சாய்பாபா காலனி, வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (65). இவர் கடந்த சில மாதங்களாக பல் வியாதியால் அவதி அடைந்து வந்தார். அதற்கான மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். எனினும், பல்லில் ஏற்பட்ட கடுமையான வலி குறையாததால், அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 13ம் தேதி இரவு வீட்டில் தூக்கிட்டார்.

ஜெயராஜ் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன் கிருஷ்ணகுமார் (32), அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.