தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேதமடைந்த சாலையை சீரமைக்க கமிஷனர் அறிவுறுத்தல்

கோவை, நவ. 12: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வடக்கு மண்டலம் வார்டு எண் 18க்குட்பட்ட கவுண்டம்பாளையம், ராமசாமி நகர் பகுதியில் அமைந்துள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேடு மற்றும் தூய்மைப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

Advertisement

இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம், தயாள் வீதி பிரதான சாலை பகுதிகளில் சாலை ஓரங்களில் உள்ள மண், கல் குவியல்களை உடனடியாக அகற்றிடவும் மற்றும் அப்பகுதியில் சேதமடைந்த தார் சாலையினை உடனடியாக சீரமைக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம், மாணிக்க வாசகர் நகர் பகுதியில் தூய்மை பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார். உடன் மாநகர நல அலுவலர் மரு. மோகன், உதவி நகர் நல அலுவலர் மரு. பூபதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Advertisement