தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை: நள்ளிரவில் சுற்றிய இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய கோவை எஸ்.பி

மேட்டுப்பாளையம், நவ.12: டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே கோவை எஸ்.பி கார்த்திகேயன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது, சந்தேகப்படும்படி வந்த இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி முழுவதுமாக சோதனை செய்த பின்னரே அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், வாகனங்களின் ஆர்சி புத்தகம், ஓட்டுநர் உரிமம், வாகனங்களில் ஏதாவது சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதும் உள்ளதா? என விடிய விடிய அதிரடி சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது, நள்ளிரவு வேளையில் தேவையில்லாமல் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த இளைஞர்களை பிடித்த போலீசார் எஸ்பி முன்னிலையில் நிறுத்தினர். அப்போது, எஸ்பி கார்த்திகேயன் தேவையில்லாமல் இரவு வேளையில் சுற்றி திரிந்த இளைஞர்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தார். இதனால் இரவு வேளையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement